Wednesday, December 14, 2011

பொறாமை இதனை ஒரு தீய குணமாகவே அறிந்து பழகிவிட்டோம்..! ஆனால் இந்த பொறாமை என்னும் குணத்தை நன்கு அலசி ஆய்ந்து பார்க்கவேண்டும்
இது ஒரு அனிச்சை செயல். நான் பொறாமைபட்டதில்லை என்று யாரேனும் சொன்னால் அது முழு உண்மையாய் இருக்காது. பெண்களே அதிகம் பொறாமை குணம் கொண்டவர்கள்என்பதை முழுமையாய் ஏற்று கொள்ள கூடியது அல்ல..! பொறாமைக்கு ஆண் பெண் பேதமில்லை.

பொறாமை ஒரு மெல்லிய குணம் .. அதனை வெளிப்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல குணமாகவோ அல்லது தீய குணமாகவோ தெரிகின்றது.
ஒருவருக்கு ஓரிடத்தில் வெற்றியும்,புகழும் கிடைக்கின்றது அது நம்மை பொறாமை கொள்ள செய்கின்றது.உடனே நாமும் அந்த வெற்றிக்கு முயல்வது
ஒரு ஆரோக்கிய நிலை இதனால் நம் பொறாமை நம்மை வெற்றிக்கு தூண்டுகின்றது. அதே சமயம் ஒருவரின் வெற்றி நம்மை கோபபடுத்துகின்றது உடனே நாம் அவரைபற்றி புறங்கூற ஆரம்பித்து விடுகின்றோம். ஏன் புறங்கூறவேண்டும்..? அவருடன் மோதி வெற்றி பெற நமக்கு திறமை இல்லாதபோதே நாம் புறங்கூற செய்கின்றோம். வல்லமை பெற்ற ஒருவன் தனக்கு ஏற்படும் பொறாமையை வெற்றியாக மாற்றிக்கொள்வான்.

உங்களை பார்த்து எவரேனும் பொறாமை பட்டால் அவரை குறை சொல்லாதீர்கள். உங்கள் மீதுள்ள பொறாமைதான் உங்கள் வெற்றிக்கு கிடைக்கும் சான்றிதழ். உங்களை பார்த்து ஒருவர் பொறாமைப்பட்டால் அவரைவிட நீங்கள் சில படிகள் உயர்ந்து விடுகின்றீர்கள்.அதே சமயம் நீங்கள் யாரைப்பார்த்து பொறாமை படுகின்றீர்களோ அவரைவிட தாழ்ந்து விடுகின்றீர்கள்.

சரி பொறாமையை தவிர்க்க முடியவில்லை அது தானாகவே வந்து தொல்லை செய்கிறது என்ன செய்ய..?

பொறாமை ஏற்படும்போது சற்று நம்மை ஆழமாய் உள்நோக்கி பார்ப்போம். அந்த சமயத்தில் நமது மனம் குறுகி விடுகின்றது பொறாமை ஏற்படுத்தும் நபரே அந்த குறுகிய இடத்தில் நிற்கின்றார் நம்மை கூட நாம் இழந்து விடுகின்றோம்.அந்த நபரே நம்மை ஆட்கொண்டு இன்னல் படுத்துகின்றார் .! நமது நிலையை இழக்க செய்து,நிம்மதியை இழக்கசெய்து அவஸ்த்தைபடுத்தும் அந்த பொறாமை தேவைதானா?

சரி எப்படித்தான் இந்த பொறாமையில் இருந்து விடுபட்டு தொலைப்பது..?

மனதை கொஞ்சம் விசால படுத்துங்கள். உங்களை பொறாமைகொள்ள செய்பவரின் நற்குணங்களை கவனியுங்கள். அவரின் செய்கையை,அவரின் வெற்றியை மனதார பாராட்டிப்பாருங்கள் உங்கள் பொறாமை கொஞ்சம் குலையும். வஞ்சனையில்லாமல், போலித்தனமும் இல்லாமல் பாராட்டுங்கள். கண்டிப்பாக நீங்கள் அவரிடத்தில் உயர்ந்து விடுவீர்கள். அவரும் உங்களிடத்தில்
வசப்பட்டுவிடுவார். இதில் நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம். மாறாக ஒரு வெற்றி பெற்ற மனநிலையும் கிடைக்கும். பொறாமை படுத்துபவரையோ, அல்லது எதிரியையோ பாராட்டி புகழ்ந்து வெல்வது அல்லது அவரை வசப்படுத்துவது அயோக்கியத்தனம் அல்ல..! முழுமனதோடு பாராட்டி உயரும் ஒரு மனிதத்தனம். என் பள்ளி பருவ காலங்களில் பொறாமை தீயில் எரிந்து இருக்கின்றேன்..முழுநேர பொறாமைக்காரனாக புறங்கூறிதிரிந்து அவஸ்தப்பட்டு கெட்ட பெயர் எடுத்து இருக்கின்றேன்
நான் யாரை பார்த்து பொறாமை பட்டேனோ அவர்கள் சில விஷயங்களில் என்னை பாராட்டிய போது முகத்தில் அறை பட்டதுபோல அவமான பட்டு அட இது நமக்கு தோனாம போச்சேன்னு நினைத்து என்னை மாற்றி கொள்ள துவங்கினேன். என் ஆசான் பாலகுமாரன் என்னை வழி நடத்த பொறாமை குணத்தை வெல்ல துவங்கி மன அமைதி கிடைக்க பெற்றேன்.

இப்போதும் கூட என்னை பலர் பொறாமை படுத்துகின்றார்கள்...! அவர்களை நான் மனதார பாராட்டிவிடுகின்றேன்..!

Sunday, April 10, 2011

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசு ..!!!(ஆதாரங்களுடன்)

குறிப்பு ;- இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் தொன்னூரு சதவீதத்திற்க்கும் மேற்பட்ட காலங்கள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி செய்துள்ளது அந்த வகையில் மத்திய அரசு என சொன்னால் அது முழுக்க முழுக்க காங்கிரஸ் அரசுதான்..!




சமீபத்தில் ஒரு நண்பருடன் உரையாடி கொண்டிருந்த போது சொன்ன ஒருகருத்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது!

அதாவது பஞ்சாப் மாநிலம் நிறைவான நீர் வளத்தையும்,அதீதமான விவசாய உற்பத்தியையும் பெற்றுஇருந்த காரணத்தாலேயே அங்கே தனிநாடு கேட்டு போராட்டம் வெடித்ததாகவும், அதேபோல தமிழ் நாட்டில் நிறைவான நீர்வளம் இருந்தால் தமிழ்நாடும் விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கும் என்றும் அப்படி
ஆகிவிட்டால் தமிழ் நாட்டிலும் தனிநாடு கேட்டு போராட்டம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,ஏற்கனவே தமிழ் நாட்டில் தனிநாடு கோரும் சக்திகள் இருப்பதாலும், தமிழ் நாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்க விடாமல் மத்திய காங்கிரஸ் அரசு சதி செய்வதாக கூறினார்.

அவர் சொன்னதை முழுமையாக ஏற்று கொள் முடியவில்லை ..!

ஆனால் ..? அவர் சொன்னது மத்திய அரசுமேல் சந்தேகத்தை ஏற்படுத்தியது உண்மை!

தமிழகத்தில் பாசன வசதிக்காக சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு புதிய முயற்சியையும் அரசு செய்ததாக தெரியவில்லை.

கல்லணை

கரிகால் சோழன் கட்டிய இந்த கல்லனையாலேயே தஞ்சை மாவட்டம் நெற் களஞ்சியம் ஆயிற்று.!

வீராணம் ஏரி

இதுவும் சோழ மன்னர் காலத்திலேயே உருவாக்க பட்டது. கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்திய பெருமையும் சோழ மன்னரையே சாரும் .

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வருடமும் கடலில் சென்று கலக்கும் மழை நீரின் அளவானது அந்த வருடத்திற்கு தேவைப்படும் விவசாய பாசன நீரின் அளவை விட அதிகம் என கணிப்புகள் கூறுகின்றன. அந்த மழை நீரை சேமித்து வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பொன் விளையும் தஞ்சை

நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் சில விசயங்களை கூற முடியும் .கடற்கரையில் நின்று பார்த்தால் அடுத்த கரை தெரியாதே அதேபோல பச்சை பசேல் என்ற அடுத்த கரையே தெரியாத அளவிற்கு வயல் வெளிகளை எங்கள் மாவட்டத்தில் பல இடங்களில் காணலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை ஆற்றில் நிறைவாக நீரும் வந்து மழையும் பொய்க்காமல் பெய்யவே ..! மிக மிக அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்தது. மன்னார்குடி,பெருக வாழ்ந்தான் போன்ற இடங்களில் விளைந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க இடமில்லாமல் ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் திண்ணைகளிலும் தெருக்களிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
தெருக்களில் அடுக்கிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாய் போனது . ஒரு போகம் விளைச்சலுக்கே இப்படி ..!
நீர் வளம் நிறைவாக இருந்து மூன்று போகம் விளைந்தால் விளைச்சலை நினைத்து பார்க்கவே முடியவில்லை.





மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்க....! தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் !

பாலாறு

வட ஆற்காடு செங்கல்பட்டு மாவட்டங்களின் விவசாயிகளின் உரிமையான பாலாற்று நீரை தடுத்து, பல ஒப்பந்தங்களையும் மீறி செயல்பட்டது கர்நாடக அரசு. இதனால் பாலாற்று நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 3,75,000 ஏக்கரில் இருந்து 2,45,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது.

முல்லை பெரியாறு

இந்த அணை, மாநிலப் பிரிவினையின்போது கேரளாவின் வசம் போனது. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. இதற்குப் பிறகும் 1979ல் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. எனவே அணையின் மட்டம் 136 அடியாகக் குறைந்தது. இதனால் வருடத்திற்கு 13.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழந்தது. இதனால் மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன.

காவிரி பிரச்சனை

இன்று வரை காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் சட்டத்தை மீறியும் அனுமதியின்றியும் 19 நீர்த் தேக்கங்களை ரூ.156906 இலட்சங்களில் கர்நாடக அரசு கட்டியுள்ளது. இவைகளில் 175 ஆயிரம் மிலியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.

கர்நாடகம் 1968இல் இருந்தே தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட மறுத்து வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களிலும் பலன் கிட்டாது கர்நாடகம் தொடர்ந்து சண்டித்தனம் செய்யவே, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, அதன் ஆணைப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது 1991 ஜூன் 25இல் தன் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு மாதவாரியாகக் கணக்கிட்டு ஆண்டுதோறும் 205 ஆ.மி.க. அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகம் அதைத் திறந்து விடாததோடு, காங்கிரஸ் அரசும் அதைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதன் பின் 15 ஆண்டுகள் கழித்து 05-02-07 அன்றுவெளிவந்த இறுதித் தீர்ப்பும் தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்து விட்டது என்பதும் பலரும் அறிந்த ஒன்று.

(தகவல்கள் திண்ணை ,கீற்று இணைய தளங்களில் சுடப்பட்டது )

முழுமையாக நீர் வளம் பெற்றுவிட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி பெருகி தனிநாடு போராட்டம் வெடிக்குமோ என்ற பயத்தில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் சதி செய்கிறதா ...???


அப்புறம் ஒரு முக்கிய செய்தி ...!

இந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம்


கை சின்னம் அதை மறக்க வேண்டாம்...!



.......சில சேர்க்கைகளுடன் கூடிய மீள் பதிவு

Tuesday, March 22, 2011

கூட்டணி வாக்கு சதவீத கணக்கு

திமுக கூட்டணி

திமுக 30%--32%

காங்கிரஸ் 7%--10%

பாமக 4%--5%

விடுதலை சிறுத்தை 1.5%--2%

மற்றவர்

கொமுக

முஸ்லீம் லீக்

வாண்டையார் கட்சி

பெமக அனைத்தும் சேர்த்து 3%-4%

ஆக திமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45.5%--53%

அதிமுக கூட்டணி

அதிமுக 30%--32%

தேமுதிக 8%--10%

இ.கம் 1%---2%

மா.கம் 1%--2%

மற்றவர்

மமக

சமக

புத

மூமுக

பார்வர்டு பிளாக்

குடியரசு கட்சி அனைத்தும் சேர்த்து 5%--6%

ஆக அதிமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45%--52%

இரு கூட்டணிகளும் கிட்ட தட்ட சம பலத்துடன் இருக்க

மதிமுக ஓட்டுகள் தான் இங்கே ஆட்சியை நிர்ணயிக்கும்

மதிமுக ஓட்டு சதவீதம் 3.54.5%

அதிமுக மேல் வெறுப்பில் இருக்கும் மதிமுக வாக்காளர்கள் திமுக விற்க்கு வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் திமுக வெல்லும்

மதிமுக வை புறக்கணித்ததால் வாய்ப்பை இழக்கிறார் அம்மா,!

....

கூட்டணி வாக்கு சதவீத கணக்கு

திமுக கூட்டணி

திமுக 30%--32%

காங்கிரஸ் 7%--10%

பாமக 4%--5%

விடுதலை சிறுத்தை 1.5%--2%

மற்றவர்

கொமுக

முஸ்லீம் லீக்

வாண்டையார் கட்சி

பெமக அனைத்தும் சேர்த்து 3%-4%

ஆக திமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45.5%--53%

அதிமுக கூட்டணி

அதிமுக 30%--32%

தேமுதிக 8%--10%

இ.கம் 1%---2%

மா.கம் 1%--2%

மற்றவர்

மமக

சமக

புத

மூமுக

பார்வர்டு பிளாக்

குடியரசு கட்சி அனைத்தும் சேர்த்து 5%--6%

ஆக அதிமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45%--52%

இரு கூட்டணிகளும் கிட்ட தட்ட சம பலத்துடன் இருக்க

மதிமுக ஓட்டுகள் தான் இங்கே ஆட்சியை நிர்ணயிக்கும்

மதிமுக ஓட்டு சதவீதம் 3.54.5%

அதிமுக மேல் வெறுப்பில் இருக்கும் மதிமுக வாக்காளர்கள் திமுக விற்க்கு வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் திமுக வெல்லும்

மதிமுக வை புறக்கணித்ததால் வாய்ப்பை இழக்கிறார் அம்மா,!

Saturday, February 26, 2011

அஞ்சு ஜோக்கருக்கு வராத ரம்மி ..!



சொந்த ஊர்பயணம்..!


நண்பர்கள் சந்திப்பு ...!


குட்டைகரை தாண்டி
பி .டி ராவுத்தர் தோப்பு...!


கூடவே கொண்டு போன
மேன்ஷன் ஹவுஸ் புல்
பாட்டில்கள்..!



நன்பனின் மனைவி திட்டி கொண்டே
சமைத்து கொடுத்த கெளுத்தி மீன்
குழம்பு...!



தென்னங்கீற்றில் அமர்ந்து ஆடிய
ரம்மி..!


நினைவுகள் எல்லாம் சுகமாய் இருப்பினும்....!



கடைசி ஆட்டத்தில்..! ’’கம்பலில்’’ அஞ்சு ஜோக்கருக்கு
வராத ரம்மி உறுத்தி கொண்டே இருக்கிறது ..!